செய்திகள்
கோப்பு படம்

வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி பெயிண்டர் பலி

Published On 2020-01-07 16:25 GMT   |   Update On 2020-01-07 16:25 GMT
வேளாங்கண்ணியில் கடலில் குளித்த பெயிண்டர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணி:

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பவன்குமார் (வயது 26). பெயிண்டர். இவருடைய நண்பர்கள் அவினா‌‌ஷ், பொம்மையா. இவர்கள் 3 பேரும் சுற்றுலாவாக வேளாங்கண்ணிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் வேளாங்கண்ணி ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு அங்குள்ள கடலில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது திடீரென ராட்சத அலையில் 3 பேரும் சிக்கினர். உடனே அவர்கள் சத்தம் போட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் மற்றும் மீனவர்கள் கடலில் மூழ்கிய அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் அவினா‌‌ஷ், பொம்மையா ஆகிய 2 பேரையும் மயக்க நிலையில் மீட்டனர். இதையடுத்து அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பவன்குமாரையும் மயக்க நிலையில் மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கீழையூர் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News