செய்திகள்
தொழிலாளி மாயம்

வேதாரண்யம் அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்

Published On 2020-01-06 08:45 GMT   |   Update On 2020-01-06 08:45 GMT
வேதாரண்யம் அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோவில்தாவு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வீரமணி (வயது 35). இவர் வேதாரண்யம் ஒன்றியம் வெள்ளிக்கிடங்கு பகுதியில் சிமெண்ட் ஓர்க்ஸ் பணியில் வேலை பார்த்து வருகிறார்

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.இதுகுறித்து அவரது மனைவி சத்யா வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமாரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News