செய்திகள்
வாக்காளர் பட்டியல் (கோப்புப்படம்)

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Published On 2020-01-01 11:04 GMT   |   Update On 2020-01-01 11:04 GMT
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் 4 நாட்கள் நடைபெறுகிறது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1.1.2020-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை), 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 11-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்திட பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உரிய அத்தாட்சி ஆவண நகல்களுடன் பெறுவார்கள்.

எனவே இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News