செய்திகள்
கோப்பு படம்

ஈரோடு கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2019-12-28 13:12 GMT   |   Update On 2019-12-28 13:12 GMT
ஈரோடு கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
ஈரோடு:

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என பிளாஸ்டிக் விற்பனை கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொங்கலம்மன் கோவில் வீதி, புது மஜித் வீதி, சுல்தான் பேட்டை, மணிக்கண்டு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது.

இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது இது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தர விட்டார் அதன்படி மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி தலைமையில் அதிகாரிகள் கடைவீதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தன. மேலும் 5 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த தொடர்பாக ஒரு கடைக்கு 25 ஆயிரம் வீதம் ரூ 1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News