செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு பகுதியில் 30-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2019-12-28 16:42 IST   |   Update On 2019-12-28 16:42:00 IST
ஈரோடு பகுதியில் 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு:

ஈரோடு 110-22 கிவோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ. டவுன் மின் பாதையில் உயர் அழுத்த மின் புதை வடம் கம்பிகளை மின் கம்பங்கள் மேல் பொருத்தும் பணி நடக்கிறது.

இதையொட்டி வரும் 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு நேதாஜி ரோடு, ஆர்.கே.வி. ரோடு, ராமசாமி வீதி, வெங்கடாச்சலம் வீதி, கொங்காலம்மன் கோவில் வீதி, மணிக்கூண்டு, சொக்க நாத வீதி, ஜின்னா வீதி, அக்ராகாரம் வீதி.

இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Similar News