செய்திகள்
பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2019-12-27 09:53 GMT   |   Update On 2019-12-27 09:53 GMT
சிறுநீரக தொற்று சம்பந்தமாக வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பேரறிவாளன் இன்று சிகிச்சை பெற்றார்.
வேலூர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோலில் வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கி அவரது தந்தையின் உடல் நிலையை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுநீரக தொற்று சம்பந்தமாக வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பேரறிவாளன் இன்று சிகிச்சை பெற்றார். அவருடன் போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News