செய்திகள்
அனைத்து இடங்களிலும் அதிமுக முழுமையான வெற்றி பெறும்- அமைச்சர் செங்கோட்டையன்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக தான் முழுமையான வெற்றி பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபி:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற் கட்டமாக நடைபெறுகிறது. கோபி ஒன்றிய பகுதிகளில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு தேர்தல் துவங்கியது. கிராம பகுதி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையாக நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதே வாக்குச்சாவடியில் எம்.பி, எம்.எல்.ஏ. தேர்தலுக்கு நான் இங்கு வந்து வாக்களித்துள்ளேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது ஊராட்சி தேர்தலில் நான் வாக்களிக்க வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் இன்று ஊராட்சி தேர்தலுக்காக நான் வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தான் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசின் திட்டங்களை இணைந்து செயல்படுத்த முடியும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக தான் முழுமையான வெற்றி பெறும். கடலை பயிருக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில், அதற்கான நல்ல தகவல் வரும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. அரசு தொலைநோக்கு சிந்தனையோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதால், விவசாயம் நன்றாக உள்ளது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தி வருவதாக அரசின் கவனத்திற்கு வந்தது.
அதை நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, மாணவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருக்கலாம். மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவ தேர்வு புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளான வரும் 3-ந்தேதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற் கட்டமாக நடைபெறுகிறது. கோபி ஒன்றிய பகுதிகளில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு தேர்தல் துவங்கியது. கிராம பகுதி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையாக நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
கோபி அருகே உள்ள தனது சொந்த ஊரான குள்ளம்பாளையம் உயர் நிலைப்பள்ளியில் 61-வது வாக்குச்சாவடியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் காலை 7.20 மணிக்கு வாக்காளர்களோடு வரிசையாக நின்று வாக்களித்தார்.
இதே வாக்குச்சாவடியில் எம்.பி, எம்.எல்.ஏ. தேர்தலுக்கு நான் இங்கு வந்து வாக்களித்துள்ளேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது ஊராட்சி தேர்தலில் நான் வாக்களிக்க வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் இன்று ஊராட்சி தேர்தலுக்காக நான் வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தான் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசின் திட்டங்களை இணைந்து செயல்படுத்த முடியும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக தான் முழுமையான வெற்றி பெறும். கடலை பயிருக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில், அதற்கான நல்ல தகவல் வரும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. அரசு தொலைநோக்கு சிந்தனையோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதால், விவசாயம் நன்றாக உள்ளது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தி வருவதாக அரசின் கவனத்திற்கு வந்தது.
அதை நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, மாணவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருக்கலாம். மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவ தேர்வு புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளான வரும் 3-ந்தேதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.