செய்திகள்
மரணம்

ஈரோடு அருகே மில்லுக்கு சென்ற தொழிலாளி பாம்பு கடித்து பலி

Published On 2019-12-26 14:42 GMT   |   Update On 2019-12-26 14:42 GMT
ஈரோடு அருகே மில்லுக்கு சென்ற தொழிலாளி பாம்பு கடித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் குருவராஜ் (வயது 62). இவர் கடந்த 4 வருடமாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூரில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

இரவு குருவராஜ் வீட்டில் இருந்து மில்லுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் பாம்பு ஒன்று குருவராஜை கடித்தது. இதையடுத்து அவர் அலறி துடித்தார்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி குருவராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குருவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

Tags:    

Similar News