ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
ஈரோடு:
நாகபட்டினம் மாவட்டம் சேத்தூர் பருத்திகுடியை சேர்ந்த சத்தியசுந்தரம் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவர் கேரளா மாநிலம் கோழிகோட்டில் இருந்து ஈரோடு வருவதற்காக மங்களுர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுபெட்டியில் பயணித்தார்.
ரெயில் பெருந்துறை- தொட்டிபாளையம் இடையே நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. அப்போது, ரெயில் பெட்டியில் படிகட்டில் நின்றபடி பயணித்த சத்தியசுந்தரம் எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது வலது கை மற்றும் வலது கால் துண்டானது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.