செய்திகள்
விபத்து

ஈரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2019-12-26 16:18 IST   |   Update On 2019-12-26 16:18:00 IST
ஈரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

கரூர் மாவட்டம் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது19). சம்பவத்தன்று சுரேந்தர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்திற்கு வந்திருந்தார். விசேசம் முடிந்ததும் ஈரோட்டில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ஈரோடு சக்தி ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுரேந்தர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News