செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

Published On 2019-12-26 10:16 GMT   |   Update On 2019-12-26 10:16 GMT
ஈரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு பெரிய செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெசிண்டா மேரி (வயது28). சுரேசும், ஜெசிண்டா மேரியும் கடந்த 5½ வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெசிண்டாமேரி கரூரில் இருக்கும் தனது தாயிடம் தொலைபேசியில் கூறினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் ஜெசிண்டாமேரி செய்து வந்தாராம். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெசிண்டா மேரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News