செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-12-25 21:28 IST   |   Update On 2019-12-25 21:28:00 IST
ஈரோட்டில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம் கமலா நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது மனைவி புஷ்பலதா (29).

சம்பவத்தன்று புஷ்பலதா நாமக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது புஷ்பலதாவுக்கு கருங்கல்பாளையம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தெரிந்தவர் போன் செய்து உனது கணவர் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். என கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பலதா உடனடியாக தனது வீட்டிற்கு வந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News