செய்திகள்
திருட்டு வழக்கில் கைது

மயிலாடுதுறையில் 8 மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது

Published On 2019-12-17 23:25 IST   |   Update On 2019-12-17 23:25:00 IST
மயிலாடுதுறையில் போலீசார் வாகன சோதனையின் போது 8 மோட்டார் சைக்கிள்களை திருடியவரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சீர்காழி மெயின்ரோடு சேந்தன்குடியில் அந்த வழியாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் தரங்கம்பாடி தாலுகா மேலையூர் மேலத்தெருவை சேர்ந்த சிவராஜ் (வயது 38) என்பதும், அவர் திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்ததும் தெரியவந்தது.

மேலும் சிவராஜ், மயிலாடுதுறை தற்காலிக பஸ் நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று, அதனை மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் ஆற்றங்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Similar News