செய்திகள்
கடலில் மூழ்கி பலி

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி தபால் ஊழியர் பலி - சுற்றுலா வந்த போது பரிதாபம்

Published On 2019-12-16 17:52 GMT   |   Update On 2019-12-16 17:52 GMT
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த போது கடலில் மூழ்கி தபால் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
வேளாங்கண்ணி:

தென்காசி மாவட்டம் அகரகட்டு ஆய்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் அந்தோணி வியாகப்பன். இவரது மகன் மரிய அந்தோணி ஸ்டாலின் (வயது32). இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள குணராமநல்லூரில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ந்தேதி மரிய அந்தோணி ஸ்டாலின் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மரிய அந்தோணி ஸ்டாலின் கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அருகில் இருந்த நண்பர்கள் மற்றும் பொது மக்கள் அவரை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கீழையூர் மற்றும் வேளாங்கண்ணி கடலோர காவல்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News