செய்திகள்
கோப்புப்படம்

பவானி அருகே மின்சாரம் தாக்கி வங்கி கேஷியர் பலி

Published On 2019-12-13 11:32 GMT   |   Update On 2019-12-13 11:32 GMT
பவானி அருகே உள்ள பூலப்பாளையம் பகுதியில் வசிக்கும் அந்தியூர் வங்கி கேசியர் தனது வீட்டில் தண்ணீர் மோட்டார் ஸ்விட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி பலியானார்.
சித்தோடு:

பவானி காலிங்கராயன் பாளையம், பூலப்பாளையம், செல்லிக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40) அந்தியூரில் உள்ள ஒரு வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் மேலே ஏற்றிட மின் மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மேலே இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அடிபட்ட அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சித்தோடு போலீசில் இறந்த சிவக்குமாரின் தந்தை குப்புசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த சிவக்குமாருக்கு மனைவி மற்றும் 6 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
Tags:    

Similar News