செய்திகள்
விபத்து

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 11-ம் வகுப்பு மாணவர் பலி

Published On 2019-12-13 07:04 GMT   |   Update On 2019-12-13 07:04 GMT
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 11-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படப்பை:

படப்பை அடுத்த மணிமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பிரகாஷ் (16).

இவர் படப்பையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியியை சேர்ந்த செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் பிரகாசை அழைத்து கொண்டு புஷ்ப கிரி சாலையில் படப்பை நோக்கி சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பிரகாஷ் பரிதாபமாக பலியானார்.

செல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்தார். நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News