செய்திகள்
விபத்து

அந்தியூர் அருகே லாரி மோதி பெண் பலி

Published On 2019-12-12 20:09 IST   |   Update On 2019-12-12 20:09:00 IST
அந்தியூர் அருகே ஆற்றில் துணிகளை துவைத்து வீடு திரும்பிய பெண் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆப்பக்கூடல்:

ஆப்பக்கூடல் அடுத்த அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் காளிதாஸ் காலணியை சேர்ந்தவர் கோபால் (வயது-45), இவரது மனைவி மாதேவி (வயது-35). இவர்கள் நேற்று மாலை அத்தாணி கைகாட்டி பவானி ஆற்றில் துணிகளை துவைக்க வந்துள்ளார்.

துணிகளை துவைத்து மொபட்டில் வைத்துக் கொண்டு அந்தியூர் நோக்கி வீடு திரும்பி கொண்டு இருந்த கோபால் இவரது மனைவி மாதேவி கரட்டூர் மேடு என்ற பகுதியில் வந்த போது கோவையில் இருந்து மேட்டூர் நோக்கி அந்தியூர் சாலையில் வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த மோபட்டின் பின்பக்கம் மோதியதில் மாதேவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில் மாதேவியின் கணவர் கோபால் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

மேலும் லாரியை பறிமுதல் செய்து மேட்டூர் டேம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News