செய்திகள்
சீர்காழி அருகே கோவில் குளத்தில் குளித்த தாய்-மகள் உயிரிழப்பு
சீர்காழி அருகே கோவில் குளத்தில் குளித்த தாய், மகள் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.
நாகை:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது உமையாள்பதி கிராமம். இங்குள்ள கோவில் குளத்தில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற தாய், மகள் இருவரும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.