செய்திகள்
ஆதம்பாக்கத்தில் தெருவில் ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி - அதிகாரியிடம் புகார்
ஆதம்பாக்கம் நியூகாலனி ஏரிக்கரை தெருவில் ஓடும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் நியூகாலனி ஏரிக்கரை தெருவில் கழிவுநீர் குழாய் சரிபார்க்கும் பணி 3 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில், கழிவுநீர் அகற்றும் மோட்டார் பழுதடைந்ததால் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திலும் சாக்கடை நீர் புகுந்துள்ளது. குடிநீரிலும் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன், மக்கள் நலசங்க தலைவர் லோகேஷ் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரி சுபாஷினியை சந்தித்தனர். அப்போது, கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆதம்பாக்கம் நியூகாலனி ஏரிக்கரை தெருவில் கழிவுநீர் குழாய் சரிபார்க்கும் பணி 3 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில், கழிவுநீர் அகற்றும் மோட்டார் பழுதடைந்ததால் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திலும் சாக்கடை நீர் புகுந்துள்ளது. குடிநீரிலும் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன், மக்கள் நலசங்க தலைவர் லோகேஷ் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரி சுபாஷினியை சந்தித்தனர். அப்போது, கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.