செய்திகள்
கைது

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த காட்டில் விலங்குகளை வேட்டையாட வந்த 3 பேர் கைது

Published On 2019-12-10 04:36 GMT   |   Update On 2019-12-10 04:36 GMT
அடர்ந்த காட்டில் விலங்குகளை வேட்டையாட வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டம் கேர்மாளம் வனச்சரகம் மேற்கு வனப்பகுதி இது இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் வனத்துறையினர் அடர்ந்து காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வனபகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கு பகுதியில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கேர்மாளம் அருகே உள்ள கானக்கரையை சேர்ந்த ஜடையன்(53), மாதேஸ்(32) மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த முருகேஷ்(40) என்பது தெரியவந்தது. அவர்கள் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய சுருக்கு கம்பி, அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அனுமதியின்றி காட்டில் சுற்றித்திரிந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆசனூர் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் குமளி வெங்கட் அப்பலா நாயுடு முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த அவர், வனத்தில் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாட முயன்றதாக மூவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News