செய்திகள்
கைது

அறந்தாங்கி அருகே மது விற்றவர் கைது

Published On 2019-12-05 11:17 GMT   |   Update On 2019-12-05 11:17 GMT
அறந்தாங்கி அருகே சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கியை அடுத்த குன்னக்குரும்பியில் சிலர் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்து வந்தனர்.

 இது குறித்து தகவலின் பேரில் டி.எஸ்.பி., பாலமுருகன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், காவலர் ரமேஷ் ஆகியோர் குன்னக்குரும்பி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News