செய்திகள்
ஈரோட்டில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
ஈரோட்டில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு காசிபாளையம், மாரியம்மன் கோவில், நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் தம்பிரான். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் (வயது50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று தம்புரானுக்கும் கற்பகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தம்பிரான் வெளியே சென்று விட்டார். கற்பகம் வீட்டில் இருந்த மண் எண்ணெயை எடுத்து திடீரென தனக்கு தானே உடலில் தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி கற்பகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு காசிபாளையம், மாரியம்மன் கோவில், நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் தம்பிரான். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் (வயது50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று தம்புரானுக்கும் கற்பகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தம்பிரான் வெளியே சென்று விட்டார். கற்பகம் வீட்டில் இருந்த மண் எண்ணெயை எடுத்து திடீரென தனக்கு தானே உடலில் தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி கற்பகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.