செய்திகள்
தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பேரறிவாளன்
பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன், தனது தந்தையை ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தந்தையின் சிகிச்சைக்காகவும், சகோதரி மகள் திருமணத்துக்காகவும் 30 நாள் நிபந்தனைகளுடன் கூடிய பரோலில் கடந்த 12-ந்தேதி வெளியில் வந்தார்.
தற்போது ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ள அவர் தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பேரறிவாளன் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். உடன் போலீசார் சென்றனர். அங்கு குயில்தாசனுக்கு 1 மணி நேரம் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதனை தொடர்ந்து பேரறிவாளன் தந்தையுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தந்தையின் சிகிச்சைக்காகவும், சகோதரி மகள் திருமணத்துக்காகவும் 30 நாள் நிபந்தனைகளுடன் கூடிய பரோலில் கடந்த 12-ந்தேதி வெளியில் வந்தார்.
தற்போது ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ள அவர் தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பேரறிவாளன் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். உடன் போலீசார் சென்றனர். அங்கு குயில்தாசனுக்கு 1 மணி நேரம் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதனை தொடர்ந்து பேரறிவாளன் தந்தையுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.