செய்திகள்
கொல்லப்பட்ட எலிகள்.

சத்தியமங்கலம் அருகே விளைந்த நெற்பயிர்களை அழித்து வரும் எலிகளை கொன்று குவிக்கும் விவசாயிகள்

Published On 2019-11-28 10:48 GMT   |   Update On 2019-11-28 10:48 GMT
சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டங்களில் புகுந்து நெற்பயிர்களை அழித்து வரும் எலிகளை விவசாயிகள் கொன்று குவித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உக்கரம்,மில் மேடு ,கேத்தம் பாளையம் ஆகிய கிராம பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது இதில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கேத்தம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான எலிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் வயல் வெளிகளில் எலிகள் புகுந்து சேதப்படுத்தி வந்தன.

நெல் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் இரவு பகலாக காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டு மின்றி எலிகள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை பிடிப்பதற்காக கிடுக்கிப்பிடி அமைக்கப்பட்டு எலிகளை பிடித்து கொன்று குவித்த வண்ணம் உள்ளனர்.

எலிகளிடமிருந்து நெல் பயிர்களை பாதுகாக்க வேளாண்மைதுறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எலிகளால் தினந்தோறும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்து வாய்க்கால் நீர் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் மூழ்கின இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது விவசாயிகளுக்கு இதனை தொடர்ந்து எலிகள் தொல்லைகள் அதிகரித்து வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News