செய்திகள்
அமைச்சர் கேசி கருப்பணன்

3 ஆண்டுக்கு முன் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தலை தி.மு.க.தான் நிறுத்தியது- கருப்பணன் சொல்கிறார்

Published On 2019-11-26 10:47 IST   |   Update On 2019-11-26 11:18:00 IST
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தலை தி.மு.க.தான் நிறுத்தியது என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

ஈரோடு:

பவானியில் முதல் அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு ரூ.11ž கோடி மதிப்பிலலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

தொடர்ந்து அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மறைந்த ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் இன்று அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாணவ-மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் போற்றும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசை கலைத்து விடலாம் என கற்பனை கோட்டை கட்டியவர்களின் கனவு கோட்டை உடைந்து விட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் எதிர்கட்சியினர் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

 


கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தலை தி.மு.க.தான் நிறுத்தியது. அதேபோல இந்த முறையும் காங்கிரசை ஏவி விட்டு உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி செய்கிறது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் 5 ஆண்டுகள் உறுப்பினர் இல்லாதவர்களுக்கு பதவிகள் இல்லை என்பது இப்போது இல்லை. எம்.ஜி.ஆர் காலத்திலேயே அ.தி.மு.க.வில் கொண்டு வரப்பட்டது.

அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும்.

உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் மக்களின் அமோக ஆதரவுடன அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.

Similar News