செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
கந்தர்வகோட்டை அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பெண், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேலே பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது60). இவரின் மனைவி சகாயமேரி(45) இவர் சம்பவத்தன்று அவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மழையின் காரணமாக மின்சார கம்பி அறுந்து சாலையில் கிடந்துள்ளது.
இதனை பார்க்காத சகாய மேரி மின்சார கம்பியை காலால் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் அவர் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சகாய மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.