செய்திகள்
கொள்ளை

டி.என்.பாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி நகை கொள்ளை

Published On 2019-11-25 11:50 GMT   |   Update On 2019-11-25 11:50 GMT
டி.என்.பாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழுரில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது.

நேற்று இரவு வழக்கம் போல் கோவில் நடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இன்று காலை வந்து பார்த்த போத கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் சாமி கழுத்தில் கிடந்த நகையை திருடி சென்று உள்ளனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News