செய்திகள்
மரணம்

வேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி

Published On 2019-11-25 11:19 GMT   |   Update On 2019-11-25 11:19 GMT
வேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மருதூர் வடக்கு தெற்கு கட்டளையை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் முத்துகுமார்(வயது 33).இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்து வந்தார்.

இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் வீட்டில் டி.வி.யில் கேபிளை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பலியான முத்துகுமாருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

Tags:    

Similar News