செய்திகள்
பீர்பாட்டில் குத்து

ஆலங்குடி அருகே வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து

Published On 2019-11-24 14:49 GMT   |   Update On 2019-11-24 14:49 GMT
ஆலங்குடி அருகே மது அருந்தி கொண்டிருந்த கும்பல் வாலிபரை பீர்பாட்டிலால் குத்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அக்கும்பலை தேடி வருகின்றனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்தவர் ராஜீவ். இவர் நேற்றிரவு தவளைப்பள்ளத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றார். தவளைப்பள்ளம் விலக்கு பகுதியில் செல்லும் போது ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்கள் ராஜீவ்வுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது வாக்குவாதம் முற்றவே அந்த கும்பல் ராஜீவ்வை பீர்பாட்டிலால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர்பாட்டிலால் குத்திய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News