செய்திகள்
முருகன்

சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

Published On 2019-11-16 08:28 GMT   |   Update On 2019-11-16 09:45 GMT
வேலூர் சிறையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன், இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18-ந் தேதி அவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த முருகன், தனி சிறை வேண்டாம் என்றும் ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறும் சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர். எனவே, தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றக்கோரி முருகன் கடந்த 11-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 

அவரது உண்ணாவிரதம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இன்று அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறினர். மேலும் நீதிமன்றம் தெரிவித்த கருத்தையும் தெரிவித்தனர். இதையடுத்து முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஏற்கனவே சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த மாதம் 18-ம் தேதியில் 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News