செய்திகள்
கே.வி.குப்பம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கே.வி.குப்பம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
கே.வி.குப்பம் அருகே உள்ள முருங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் சத்தியராஜ் (வயது18).
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த மகேந்திரன் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி மாணவர் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.