செய்திகள்
கைது

வாலாஜாவில் உதவி கலெக்டர் பிடித்து ஓப்படைத்த மாட்டை மிரட்டல் விடுத்து ஓட்டிசென்றவர் கைது

Published On 2019-11-13 12:10 GMT   |   Update On 2019-11-13 12:10 GMT
வாலாஜாவில் உதவி கலெக்டர் பிடித்து ஓப்படைத்த மாட்டை மிரட்டல் விடுத்து ஓட்டிசென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா:

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பல்வேறு விபத்துகள் நடந்து வருகிறது.

இதனால் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது.

இது குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்திடம் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் உதவி கலெக்டர் களத்தில் இறங்கினார்.

நேற்று முன்தினம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 9 மாடுகளை பிடித்து நகராட்சியில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதில் காகிதக்காரத் தெருவை சேர்ந்த பால் வியாபாரி பிரகாஷ் (30) என்பவர் நகராட்சி அலுவலகம் வந்து அதிகாரிகளை திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்து, அங்கிருந்த தனது மாட்டை அவிழ்த்து ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வாலாஜா நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாவூத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News