செய்திகள்
ரெயில்வே பணிமனையில் தீ விபத்து

ஜோலார்பேட்டை ரெயில்வே பணிமனையில் தீ விபத்து

Published On 2019-11-13 12:02 GMT   |   Update On 2019-11-13 12:02 GMT
ஜோலார்பேட்டை ரெயில்வே பணிமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பணிமனையில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பணிமனையில் பழுதான சரக்கு ரெயில் பெட்டிகளை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ரெயில் பெட்டிகளில் தேய்ந்து பழுதான உதிரிபாகங்களை வெல்டிங் மூலம் அகற்றியபோது, வெல்டிங் கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து அங்கிருந்த 100க்கும் மேற்பட்டோர் பணிமனையில் இருந்து வெளியேறினர்.

இதுகுறித்து ஒப்பந்த ஊழியர்கள் தலைமைக் கண்காணிப்பாளர் ஜான்சன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று, தீயை அணைத்தனர். தீப்பிடித்த சிலிண்டரை அங்குள்ள தண்ணீர் தொட்டியில் அழுத்தினர்.

இதனால் ரெயில்வே பணிமனையில் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News