செய்திகள்
கோப்பு படம்

வங்கியில் பணம் கட்ட வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை

Published On 2019-11-13 10:50 GMT   |   Update On 2019-11-13 10:50 GMT
ஆம்பூர் அருகே உள்ள வங்கியில் பணம் கட்ட வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி விஜயா (வயது 56). இன்று காலை ஆம்பூர் பஜார் வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தை செலுத்துவதற்காக விஜயா ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றார். வங்கியில் கூட்டம் அதிகளவில் இருந்தது. அவர் பணத்தை செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் விஜயாவின் பையிலிருந்த ரூ.50 ஆயிரத்தை நைசாக எடுத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியேறிவிட்டார். வங்கியில் செலுத்த பணத்தை பையில் தேடியபோது பையிலிருந்த பணம் மாயமானது கண்டு விஜயா அதிர்ச்சி அடைந்தார். அங்கு நின்றவர்களிடம் விசாரித்தார். யாரும் தெரியாது என்று கூறினர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பெண் ஒருவர் விஜயாவின் பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவத்தை வைத்து அவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News