செய்திகள்
விஷம் (கோப்புப்படம்)

கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-11-13 10:27 GMT   |   Update On 2019-11-13 10:27 GMT
கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளியில் கடன் தொல்லையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அடுத்த தேக்குலபாளையத்தை சேர்ந்தவர் நாகமணியப்பா (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (30). இவர்களுக்கு ‌ஷர்ஷிதா (8) என்ற மகள் உள்ளார்.

நாகமணியப்பாவுக்கு கடன் தொல்லை இருந்ததால் மகளை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு கணவன் மனைவி இருவரும் கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளியில் தங்கி கூலி வேலைசெய்து வந்தனர். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்து மகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்தபோது கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த கணவன் மனைவி இருவரும் பொம்மனஹள்ளிக்கு சென்றனர்.

அவர்கள் நேற்று காலை நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு இறந்தது தெரியவந்தது.

இது குறித்து பொம்மனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News