செய்திகள்
காங்கிரஸ்

மத்திய அரசை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-08 12:02 GMT   |   Update On 2019-11-08 12:02 GMT
மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்து அரியலூரில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அரியலூர்:

மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்து அரியலூரில் இன்று பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார். 

அரியலூர் மாவட்ட தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான வல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் விஸ்ணு பிரசாத் எம்.பி., தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் பேசுகின்றனர்.

அரியலூர் நகரதலைவர் சந்திரசேகர், தொகுதி தலைவர் திருநாவுக்ககரசு, வட்டத்தலைவர் கர்ணன், தியாகராஜன், பழனிச்சாமி, மனோகர், செந்தில் உள்பட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர் வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News