செய்திகள்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் 4–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

Published On 2019-10-29 17:52 GMT   |   Update On 2019-10-29 17:52 GMT
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 4–வதுநாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை:

அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டி.ஏ.சி.பியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கிராமபுறங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு பட்ட மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 25–ந்தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். அவர்கள் அவசர பிரிவு நோயாளிகளுக்கு பாதிப்பில்லாத நிலையில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 4–வது நாளான நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தார்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News