செய்திகள்
கைது

நாகை அருகே மணல் திருடிய லாரி டிரைவர் கைது

Published On 2019-10-10 10:32 GMT   |   Update On 2019-10-10 10:32 GMT
நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில் துணை மாவட்ட கண்காணிப்பாளர் முருகவேல் அறிவுறுத்தல்படி மணல் கடத்தலை தடுக்கும் வகையில் நேற்று இரவு நாகூர்போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நாகூர் வெட்டாறு பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கீழ்வேளுர் ராயத்தமங்கலம் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (வயது 37) என்பதும் அவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

Tags:    

Similar News