செய்திகள்
முதலை உள்ள குட்டை இதுதான்.

தலமலை பகுதியில் ஊருக்குள் உள்ள குட்டையில் முதலை - பொதுமக்கள் அச்சம்

Published On 2019-10-09 05:40 GMT   |   Update On 2019-10-09 05:40 GMT
தலமலை பகுதியில் ஊருக்குள் உள்ள குட்டையில் முதலை ஒன்று இருந்ததை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம், தாளவாடி அடுத்த தலமலை ,கோடிபுரம்,தொட்டாபுரம், என 3 கிராமங்கள் உள்ளன இந்த கிராமங்கள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் 4-க்கும் மேற்பட்ட குளங்களும் 5-க்கும்மேற்பட்ட குட்டைகளும் உள்ளன கடந்தசில நாட்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துவருகிறது.

குளத்தில் மழை நீர் பாதியளவு நிரம்பி உள்ளது இந்நிலையில் தலமலை அருகே உள்ள குளத்தின் அருகே சிலர் மாடுகள் மேய்த்து உள்ளனர். அப்போதுமாடுகள் மிரண்டு ஓடியுள்ளது. இதனை கண்ட மக்கள் குளத்தின் அருகே சென்றுபார்த்த போது அங்கு பெரிய முதலை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குளத்தில் முதலை இருக்கும் தகவல் அருகில் உள்ள கிராமங்களுக்கும் தெரியவந்தது முதலையை பார்க்க கூட்டம் கூடியது.

கரையில் படுத்து இருந்த முதலை தண்ணீர்க்குள் சென்று மறைந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும் போது “முதலை தற்போது இக்குளத்தில் உள்ளது. இது இரவு நேரத்தில் ஊருக்குள் புகும் அச்சம் உள்ளது எனவே குளத்தில் உள்ள முதலையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடவேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்து உள்ளனர் . 

Tags:    

Similar News