செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோயில்

மோடி, சீன அதிபர் வருகை எதிரொலி- மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்

Published On 2019-10-08 04:26 GMT   |   Update On 2019-10-08 04:26 GMT
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மாமல்லபுரம்:

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகிற 12, 13-ந் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர்கள் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்சுனன் தபசு, பட்டர்பால், கடற்கரை கோயில், ஐந்துரதம் ஆகியவற்றை சுற்றிப் பார்க்கிறார்கள்.

இதையடுத்து மாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மரக்கன்றுகள், புல்வெளிகள் அமைக்கப்படுகின்றன. அங்குள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசப்படுகின்றன. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன.

மோடி -ஜி ஜின்பிங் பார்வையிடும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. 
Tags:    

Similar News