செய்திகள்
கோப்புப்படம்

பண்ருட்டி அருகே 5-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

Published On 2019-09-27 10:14 GMT   |   Update On 2019-09-27 10:14 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 5-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாலூர் சன்னியாசிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55) கூலி தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் நேற்று மாலையில் அங்குள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றாள்.

அப்போது இதை அறிந்த கூலி தொழிலாளி சேகரும் கரும்பு தோட்டத்திற்கு பின்தொடர்ந்து சென்றார். பின்பு அவர் அங்குநின்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அதன் பின்பு அந்த சிறுமி வீட்டுக்கு அழுதுகொண்டே சென்றாள். வீட்டுக்கு சென்றதும் நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினாள்.

இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி சேகரை தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News