செய்திகள்
பவானி அருகே கணவருடன் தகராறில் மனைவி தற்கொலை
பவானி அருகே கணவருடன் தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஓம்சக்தி நகர் தாளப்பையனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயா (39).
இவரது கணவர் ஆறுமுகம் இருவரும் அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
விஜயாவுக்கு இடுப்பு வலி மற்றும் தலைவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்தார். மேலும் கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுமுகம் வெளியே சென்று படுத்து கொண்டார். ஆறுமுகம் இரவு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் சென்றார்.
அப்போது வீட்டுக்குள் விஜயா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி உடலை பார்த்து கதறி அழுதார்.
இது குறித்து ஆறுமுகம் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.