செய்திகள்
கைது

ஈரோடு அருகே குடிக்க பணம் கேட்டு மிரட்டல்: 2 பேர் கைது

Published On 2019-09-23 11:06 GMT   |   Update On 2019-09-23 11:06 GMT
ஈரோடு அருகே குடிக்க பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் கிட்டான் (வயது 44).

இவர் சம்பவத்தன்று பவானி ரோடு நெரிக்கல் மேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த 2 வாலிபர்கள் கிட்டானை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கிட்டான் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கருங்கல் பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்த முருகேசன் (29), அஜித்குமார் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News