செய்திகள்
கோப்பு படம்

வேதாரண்யம் அருகே குடிபோதையில் தனது வீட்டிற்கு தீ வைத்த தொழிலாளி

Published On 2019-09-18 12:06 GMT   |   Update On 2019-09-18 12:06 GMT
வேதாரண்யம் அருகே குடிபோதையில் வந்த தொழிலாளி தனது வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் மேலும் 2 வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் தெற்கு குத்தகையை சேர்ந்தவர் வடிவேலு (வயது 38) இவர் தன் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்ததால் அவர் கோபித்து கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த வடிவேலு நேற்று குடிபோதையில் தன் வீட்டிற்கு தீ வைத்தார்.

வீடு தீ பிடித்து எரிந்த நிலையில் அருகில் இருந்த பாலகிருஷ்ணன் என்பவரது வீடும் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.

வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் 2 வீடுகளிலும் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின. இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் வடிவேலிடம் விசாரனை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News