செய்திகள்
சிறுவன் உயிரிழப்பு

நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Published On 2019-09-13 08:54 GMT   |   Update On 2019-09-13 08:54 GMT
நாகை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வாஹித் உசேன். இவரது மகன் அப்துல் சுக்கூர் (வயது11).

இந்த நிலையில் வாஹித் உசேனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நாகை பாப்பாக்கோவிலில் உள்ள தர்காவில் தங்கி கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் தந்தையுடன் சிறுவன் அப்துல் சுக்கூர் தங்கி இருந்துள்ளான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தர்கா அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுத்து வருவதற்காக அப்துல் சுக்கூர் சென்றபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து மூழ்கினான்.

உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

இதுபற்றிய புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News