செய்திகள்
மரணம்

சென்னை வந்த விமானத்தில் வெளிநாட்டு பெண் பயணி மரணம்

Published On 2019-09-12 08:26 GMT   |   Update On 2019-09-12 08:26 GMT
சென்னை வந்த விமானத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் பயணி உயிரிழந்தார். இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:

மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு இன்று காலை ‘ஓமன் ஏர்’ விமானம் வந்தது.

இதில் தான்சானியா நாட்டைச்சேர்ந்த செல்மெனி கெனி பாண்ட் (31) பயணம் செய்தார். அவருக்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து விமானி மூலம் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். விமானம் சென்னையில் தரை இறங்கியதும், மருத்துவ குழுவினர் விரைந்து சென்று செல்மெனி கெனி பாண்ட்டை பரிசோதனை செய்தனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News