செய்திகள்
பள்ளி விளையாட்டு போட்டியில் ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய மாணவர் உடல்கருகி பலி
செங்கல்பட்டு அருகே பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய மாணவர் உடல்கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு, சின்னக்கடை திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார், கூடைப்பந்து வீரர்.
கடந்த 30-ந் தேதி பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இதில் விக்னேஷ் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி ஓடினார்.
அப்போது காற்றின் வேகத்தில் தீபத்தில் இருந்த தீ விக்னேஷ் மீது பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீயை அணைத்து விக்னேசை மீட்டனர்.
இதில் உடல் கருகிய அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு விக்னே சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவர் படித்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
பள்ளி முன்பும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு, சின்னக்கடை திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார், கூடைப்பந்து வீரர்.
கடந்த 30-ந் தேதி பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இதில் விக்னேஷ் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி ஓடினார்.
அப்போது காற்றின் வேகத்தில் தீபத்தில் இருந்த தீ விக்னேஷ் மீது பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீயை அணைத்து விக்னேசை மீட்டனர்.
இதில் உடல் கருகிய அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு விக்னே சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவர் படித்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
பள்ளி முன்பும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.