செய்திகள்
விபத்தில் 3 மாணவிகள் பலி - லாரி டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில்
கிண்டி அண்ணாசாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே விபத்தில் 3 மாணவிகள் பலியான சம்பவம் குறித்து லாரி டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
கிண்டி அண்ணாசாலையில் ஒரு தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. சம்பவத்தன்று மாலை அந்த கல்லூரி அருகே மாணவிகள் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு தாறுமாறாக வந்த ஒரு டேங்கர் லாரி மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மாணவிகள் காயத்ரி, சித்ரா, ஆஷா ஸ்ருதி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி நடைபெற்றது.
கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டேங்கர் லாரி டிரைவர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். அவர் மீது சென்னை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.25.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கிண்டி அண்ணாசாலையில் ஒரு தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. சம்பவத்தன்று மாலை அந்த கல்லூரி அருகே மாணவிகள் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு தாறுமாறாக வந்த ஒரு டேங்கர் லாரி மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மாணவிகள் காயத்ரி, சித்ரா, ஆஷா ஸ்ருதி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி நடைபெற்றது.
கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டேங்கர் லாரி டிரைவர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். அவர் மீது சென்னை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.25.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.