செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாய்ப்பால் வங்கியால் 150 குழந்தைகள் பயன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாய்ப்பால் வங்கி மூலம் 150-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசால் கடந்த நவம்பர் 2018 முதல் தாய்ப்பால் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. தாய்ப்பால் கொடுக்க இயலாத தாய்மார்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி உறுதுணையாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த தாய்ப்பால் வங்கி மூலம் 150-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். எனவே, தாய்ப்பால் கொடுக்க இயலாத தாய்மார்கள் இதன் மூலம் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.