செய்திகள்
காஞ்சிபுரம் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை
காஞ்சிபுரம் அருகே பெண் கழுத்து அறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த சாலவாக்கம், அருகே உள்ள காவிதண்டலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். தனியார் பள்ளி பஸ்சில் டிரைவராக உள்ளார்.
இவரது மனைவி கோமதி (வயது 32). இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கோமதி திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே கோமதி ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாலவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து காவூர் வரை ஓடி நின்று விட்டது. அங்கிருந்து கொலையாளிகள் வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கோமதியுடன் நெருங்கி பழகியவர்கள் யார்-யார்? அவர் எதற்காக இங்கு வந்தார் என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கோமதியின் கணவர் ஜெயபாலிடமும் விசாரணை நடக்கிறது.
இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.